மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கபாலி படத்திற்கு பிறகு மலேசியாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான உறவு மேலோங்கி காணப்படுகிறது. கபாலி கதை, மலேசிய தமிழ் மக்களை தழுவி எடுக்கப்பட்டதால் படத்தின் அநேக படப்பிடிப்பு அங்கு நடந்தது. அதனால், மலேசிய அரசே, ஷூட்டிங் நடத்த விஷேச ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்தது.
இந்நிலையில் அரசு முறை பயணமாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் இந்தியா வந்துள்ளார். பிரதமர் நஜிப், ரஜினியை சந்திப்பதாக நேற்றே தகவல் வெளியான நிலையில், இன்று(மார்ச் 31-ம் தேதி) காலை சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி பேசியதாவது... ‛‛கபாலி படத்திற்காக மலேசியா சென்றிருந்த போது இரண்டு மாதம் அங்கு தங்கி படப்பிடிப்பில் பங்கேற்றேன். அந்நாட்டு அரசு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நஜிப்பை எனது இல்லத்திற்கு வரும்படி கேட்டிருந்தேன். நல்லலெண்ண அடிப்படையில் எனது அழைப்பை ஏற்று வருகை தந்த மலேசிய பிரதமருக்கு நன்றி. இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது, நான் மலேசிய நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுவது தொடர்பான செய்தி வெறும் வதந்தியே.
ரசிகர்கள் மன்ற கூட்டம் கூடுவது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அடி என்று கூறுவதெல்லாம் பொய்யானது. ரசிகர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவிருக்கிறேன். அதற்காகத்தான் ஏப்ரல் 2-ந் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவிருக்கிறது. எந்திரன்-2 படப்பிடிப்பு தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றார்.